Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 21.10.2010

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தேவர்புரம் ரோடு பகுதியில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆய்வாளர்கள் காந்திமதி, நாகராஜன். ஆறுமுகம் மற் றும் அதிகாரிகள் தலைமை யில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தேவர்புரம் ரோட்டில் உள்ள ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு பழக்கடை, குடிசை மற்றும் மாட்டு தொழுவம் ஆகியவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் மத்தியபாகம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.