Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் கலந்தாய்வு கூட்டம்

Print PDF

தினமலர் 25.10.2010

பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள சமுதாயக்கூட கூட்டமன்றத்தில் நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றுசூழலினை மேம்படுத்துதல், சுகாதாரத்தை பேணிக்காத்தல் ஆகியவைகள் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள சமுதாயக்கூட கூட்டமன்றத்தில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பெரம்பலூர் தாசில்தார் கார்த்திக்கேயன், புது பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் வைத்தீஸ்வரன், பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஞானமூர்த்தி பங்கேற்றனர்.