தினகரன் 25.10.2010
ராசிபுரம் பகுதியில் விளம்பர பேனர்கள் அமைக்க திடீர் தடை
ராசிபுரம், அக்.25: ராசிபுரம் பகுதியில் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் நகரில் சேலம் சாலை, நாமக்கல் சாலை, ஆத்து£ர் சாலை நகரின் மையப்பகுதிகள், அரசு மருத்துவமனை, காவல்நிலையம், அரசு கல்லு£ரி, அரசு அலுவலகம், நீதி மன்றம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர், தனியார் பள்ளி, தனியார் தொழில் நிறுவனத்தினர் ஆங்காங்கே சிறிய மற்றும் மெகா சைஸ் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். அதனால் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆட்சியர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே ராசிபுரம் பகுதியில் எவ்வித டிஜிட்டல் பேனர்களும் அமைக்ககூடாது. இதனை மீறி பேனர்கள் வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிஜிட்டல் விளம்பர பேனர்களை அகற்றவும், அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.