தினகரன் 09.11.2010
பயணிகளுக்கு இடையூறாக இருந்த புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுக்கோட்டை, நவ.9: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை சுற்றியிலும் நகராட்சி கடைகள் உள்ளன. ஆனால் அக்கடைகளின் வெளியே பயணிகள் நடைபாதையில் நடந்து செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கடைகள் போட்டுள்ளதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் தலைமையில் நேற்று புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமித்து 3 அடி வரை நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. மேலும் தள்ளுவண்டி பழக்கடைகளும் அகற்றப்பட்டன.