தினமலர் 11.11.2010
ஆக்கிரமிப்புக்களை தாங்களே அகற்ற நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடன் அகற்றிக் கொள்ள வேண்டும், என நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள கடைகளில் ஆங்காங்கு நெடுஞ்சாலைத்துறை சாலையை ஆக்கிரமித்து கொட்டகை, விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. உடன், வணிகர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். அல்லது, நகராட்சி நிர்வாகம், போலீஸார், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும்போது, சாலையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டால் நீதிமன்றம் மூலம் அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும், என கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.