Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி              11.11.2010

திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, நவ.10: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாட வீதிகளில் நகராட்சி மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அகற்றினர்.

சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறும் 4 மாட வீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. தேரடி வீதி, திருவூடல் தெரு, கல்லக்கடை மூலை, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. டவுன் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.