தினமணி 11.11.2010
திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை
, நவ.10: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாட வீதிகளில் நகராட்சி மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அகற்றினர்.சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறும்
4 மாட வீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.அதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது
. தேரடி வீதி, திருவூடல் தெரு, கல்லக்கடை மூலை, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. டவுன் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.