Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற நடவடிக்கை

Print PDF

தினகரன்                   18.11.2010

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்ற நடவடிக்கை

பெங்களூர், நவ.18: பெங்களூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் 650 வழிபாட்டு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிச.31ம் தேதிக்குள் அவற்றை அகற்ற பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூர் மாவட்டம், நகரம் ஆகியவற்றில் சிறிய, பெரிய நகரங்களில் வழிபாட்டு இடம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதுகுறித்து சுப்ரீம்கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி டிச.31க்குள் மக்களுக்கு இடைஞ்சலாகவுள்ள, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு இடங்களை டிச.31ம் தேதிக்குள் இடித்துவிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெங்களூர் மாநகராட்சி மற்றும் பெங்களூர் நகர மாவட்டத்தில் 650வழிபாட்டு இடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு வழிபாட்டு இடங்கள் குறித்து பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் சித்தையா கூறுகையில், இதுஒரு சிக்கலான பிரச்னையாகும். இதில் நடைமுறை சிக்கல்கள் நிறையவுள்ளன. நிலம் ஆக்கிரமிக்கப்படுவது குற்றம் என்று தெரிந்தும் அதில் வழிபாட்டு இடத்தை நிறுவி மக்களையும், அதிகாரிகளையும் திசை திருப்பிவருவது பெரும் தவறு. ஆனால், இத்தவறுக்கு பக்தியின் பெயரில் மக்களே உடந்தையாகி ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வழிபாட்டு இடங்களை அகற்றும்போது அங்கு பக்தர்களால் மதித்து போற்றப்படும் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தால் அது கோயில் நிர்வாகிகள், மக்கள், பக்தர்கள் விருப்பப்படி மற்றொரு இடத்துக்கு மாற்றப்படுவது வழக்கம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

பெங்களூரில் மகாதேவபுராவில் ஆக்கிரமிப்பு ஆலயங்கள் அதிகளவாக 250 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து பெங்களூர் தெற்கு பகுதியிலும், கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு ஆலயங்கள் உள்ளன. பொம்மனஹள்ளியில் 7, தாசரஹள்ளியில் 9 ஆக்கிரமிப்பு கோயில்கள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்காக சிறப்புப்படை அமைக்கும் முயற்சியில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

ஆலயங்கள் அகற்றப்படுவது குறித்து பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தர் கூறுகையில், ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில்களால் மக்களுக்கு கஷ்டங்களே அதிகரிக்கும். எனவே, அவற்றை நீக்குவதே சரியானது. கோயில்களை அகற்றும்போது பக்தர்கள் மனம் புண்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோயில்கள் கட்ட மாற்றிடம் ஒதுக்கலாம் என்றார்.

ஆர்ச்பிஷப் பெர்னார்ட் மோசஸ் கூறுகையில், மதவழிபாட்டு இடங்களால் மக்களால் எந்தவொரு கஷ்டமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்து மதத்துக்கும் பொதுவாக வழிபாட்டு இடங்கள் அகற்றும் நடவடிக்கை இருக்கவேண்டியது அவசியம் என்றார்.

ஜாமியாமசூதி இமாம் ரியாஸ் கூறுகையில், சுப்ரீம்கோர்ட் நடவ டிக்கை சரியானதே மக்க ளுக்கு இடைஞ்சல்தரும் வகையில் ஆக்கிரமித்து வழிபாட்டு இடங்கள் அமைப்பது தவறு. அவற்றை அகற்றுவதே சரியானது என்றார்.