தினகரன் 19.11.2010
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
துரைப்பாக்கம், நவ. 19: பக்கிங்ஹாம் கால்வாய் ஓரம் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் திருவான்மியூர் வரை 1 கி.மீ.க்கு ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறையினரும் ஜேசிபி இயந்திரத்துடன் நேற்று அங்கு வந்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 103 வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு டோக்கன் வழங்கி, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவர்களின் பொருட்களை லாரிகளில் ஏற்றி அங்கு அனுப்பி வைத்தனர்.