தினகரன் 24.11.2010
திருவண்ணாமலை பாதாள சாக்கடை திட்டம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை, நவ.24: திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, பிரதான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மணலூர்பேட்டை சாலையில் அமைக்கப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உரிய கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இணைந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உரிய கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இணைந்து ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.
பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் தங்களுக்கு, வேறு இடத்தில் குடிசைகள் அமைக்க இடம் ஒதுக்குமாறு அப்பகுதியினர் முறையிட்டனர். இதுகுறித்து கலெக்டரிடம் முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்