Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ100 கோடி நிலம் விடுவிப்பு

Print PDF

தினகரன்            25.11.2010

ரூ100 கோடி நிலம் விடுவிப்பு

பெங்களூர், நவ. 25: பெங்களூர் நந்தினி லே அவுட் பகுதியில் ரூ100 கோடி மதிப்பிலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகாலட்சுமிபுரம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரபாபு குற்றம்சாட்டினார்.

இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகரின் நந்தினி லே அவுட் பகுதியில் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்திய நிலம் உள்ளது. இதை எந்த வளர்ச்சி திட்டத்திற்கும் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். தற்போதுவரை பி.டி.. வசம் உள்ள நிலத்தை, சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் டிநோடிபை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களுக்காக கையகபடுத்திய நிலத்தை டிநோடிபை செய்ய வேண்டியதின் அவசியம் என்ன? அரசால் டிநோடிபை செய்துள்ள நிலத்தில் விளையாட்டு திடல், பள்ளி கட்டிடம், பூங்கா உள்பட பல தேவைகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. இப்படி இருந்தும் தனியார் லாபமடையும் நோக்கத்தில் டிநோடிபை செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக கையகப்படுத்திய நிலம் டிநோடிபை செய்துள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த முறைகேட்டில் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.