சிஎம்டிஏ அதிரடி அனுமதி பெறாமல் கட்டிய பெட்ரோல் பங்குக்கு
‘சீல்’ஆலந்தூர்
, நவ. 30: உள்ளகரம்&புழுதிவாக்கம் நகராட்சிக்குட்பட்ட மேடவாக்கம் சாலையில் 4 ஆயிரம் சதுர அடியில் ஒருவர் பெட்ரோல் பங்க் கட்டுகிறார். இதற்கு நகராட்சி, சிஎம்டிஏ அனுமதி எதுவும் பெறவில்லை. இதனால் இந்த பணியை நிறுத்த நகராட்சிக்கு சிஎம்டிஏ உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உள்ளகரம்&புழுதிவாக்கம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தினகரன், செயல் அலுவலர் கிரிஜா, இன்ஜினீயர் வைதியலிங்கம் ஆகியோர் அவசர சட்டம் 2007&ன் கீழ் இந்த பெட்ரோல் பங்க் கட்ட தடை விதித்து பங்குக்கு "சீல்" வைத்தனர்.ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட நேரு காலனி
12&வது தெருவில் முனியபிள்ளை என்பவர், குடியிருப்பு கட்டிடம் கட்ட மட்டும் அனுமதி பெற்றிருந்தார். அதற்கு மாறாக, 6 கடைகள் கட்டி வணிக வளாகமாக மாற்றினார். இதையடுத்து இந்த கட்டிட பணியை நிறுத்த சிஎம்டிஏ, ஆலந்தூர் நகராட்சி ஆணையர் மனோகரன் உத்தரவின் பேரில், அந்த கட்டிடத்துக்கும் நேற்று "சீல்" வைக்கப்பட்டது.உள்ளகரம் பகுதியில் கட்டிட வரைபட அனுமதியின்றி கட்டப்படும் பெட்ரோல் பங்குக்கு, சிஎம்டிஏ உத்தரவின்படி நகரமைப்பு ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.