தினகரன் 30.11.2010
பஞ்ச்குயான் சாலையில் 180 கடைகள் தரைமட்டம்புதுடெல்லி
, நவ. 30: ராஜீவ் சவுக் நுழைவாயிலில் இருந்து ஜன்டேவாலன் வரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பஞ்ச் குயான் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 100&க்கும் மேற் பட்ட கடைகளால் சாலையை விரிவுப்படுத்த முடியவில்லை.பஞ்ச் குயான் சாலையில் கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு, கோல் மார்க்கெட் அருகில் மெட்ரோ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட மார்க்கெட்டில் 100 கடைகளை மாநகராட்சி ஒதுக்கியது. அந்த கடைகள் ஒதுக்கப்பட்ட பிறகும், பஞ்ச் குயான் சாலையில் கடைகளை வியாபாரிகள் காலி செய்யவில்லை. அதோடு, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவையும் பெற்றனர்.அதனால்
, மாநகராட்சியால் கடைகளை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாலையை அகலப்படுத்தி அமைக்கும் பணியும் நடக்கவில்லை. இந்த நிலையில்கடைகளை இடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றங்கள் விலக்கிக் கொண்டன. அதைத் தொடர்ந்து, பஞ்ச் குயான் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. மொத்தம் 180 கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.