Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொள்ளேகால் நகராட்சியில் ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற நோட்டீஸ்

Print PDF

தினகரன்               02.12.2010

கொள்ளேகால் நகராட்சியில் ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற நோட்டீஸ்

கொள்ளேகால்,டிச.2: கொள்ளேகால் பகுதியில் அரசு அங்கீகாரம் பெறாத வீடுகள் மற்றும் கோயில்களை அகற்ற கோரி நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொள்ளேகால் நகரசபைக்கு உள்ளிட்ட பொது இடங்களில் சட்டவிரோமாக ஏராளமான வீடுகள் மற்றும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பாப்பு நகர காலனியை அடுத்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சனீஸ்வரா மற்றும் நவகிரகம், குறுபகேரி ஆதிபராசக்கி, தேங்கப்பேட்டை மாரிகுடி மலிகேமாரம்மா ஆகிய கோயில்களுக்கு நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து நகரசபை துணை கமிஷனர் கூறியதாவது: வீடுகளின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை அகற்றி, வீட்டிற்கு பின்புறமாக அமைத்து கொள்ளவேண்டும். கொள்ளேகால் அம்பேத்கர் சாலையிலிருந்து, மாதேஸ்வரா மலை சாலையோரப்பகுதிகளிலும், தாலுகா அலுவலகம் முன்பும் அரசுக்கு சொந்தமாக நிலங்களில் பெட்டிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 18 கோயில்களுக்கு முன்பு பெட்டிகடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்து அரசு குறிப்பிட்டுள்ள தேதிகளில் அகற்றப்பட வேண்டும். மாதேஸ்வரா, புத்தூர் கிராமங்களில் விரிவான சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் அடிப்படையில சம்மந்த பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறினார்.