Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் மீட்பு மனையாக விற்க முயன்றது அம்பலம்

Print PDF

தினகரன்              02.12.2010

மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் மீட்பு மனையாக விற்க முயன்றது அம்பலம்

கோவை, டிச. 2: கோவை மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் நேற்று மீட்கப்பட்டது. கோவை சத்தி ரோடு கணபதி அலமு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது திரவிடம் (ரிசர்வ் சைட்) உள்ளது. இதில் 51 சென்ட் இடம் பல ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், பக்கத்தில் இருந்த ஒரு நபர் இடம் முழுவதையும் ஆக்கிரமித்தார். 26சென்ட் நிலத்தில் 2 அடுக்குமாடி கட்டினார். இந்த கட்டடத்தை கடந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த நிலம் மீட்கப்பட்டது. இப்பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. மீதமிரு ந்த 25 சென்ட் நிலம் தொ டர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு முடிந்த நிலையில், நிலத்தை மாநகராட்சி நிர் வாகம் நேற்று மீட்டது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் கள் சவுந்திரராஜன், ஜோதிலிங்கம், சுகா தார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் நிலத்தை மீட்டனர். நிலத்தில் ஆங் காங்கே முட்புதர் வளர்ந்து காணப்பட்டது.

இதனை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினனர். இடத்தை ஆக்கிரமித்த நபர் மனையாக பிரித்து சென்ட் 15 லட்ச ரூபாய் என விற்க முயன்றது தெரியவந்தது. இப்பகுதி இடம், 15 ஆண்டுக ளுக்கு பின்னர் மாநகராட்சி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 3.75 கோடி ரூபாய். 51 சென்ட் நிலத்தின் மொத்த மதிப்பு 7.65 கோடி ரூபாய். நகரில் மாநகராட்சி பொது திரவிடங்கள் தனியார் பிடி யில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி நிர்வா கம் கடந்த 7 ஆண்டுகளாக, இடத்தை கண்டு கொள்ளா மல் விட்டு விட்டது.

பலர் இன்னும் அரசியல் செல்வாக்குடன் இடத்தை வளைத்து போட்டு பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தை மீட்காவிட்டால் மனையாக விற்பனை செய்யப்படும் நிலையும் இருக்கிறது. நடப்பாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான 25 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.