Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜே.பி.நகரில் ரூ.40 கோடி மதிப்பு பி.டி.ஏ நிலம் மீட்பு

Print PDF

தினகரன்              09.12.2010

ஜே.பி.நகரில் ரூ.40 கோடி மதிப்பு பி.டி.ஏ நிலம் மீட்பு

பெங்களூர், டிச. 9: பெங்களூர் ஜே.பி. நகரில் பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாநகரில் தெற்கு மண்டலத்தில் உள்ள ஜே.பி.நகர் 8வது ஸ்டேஜ் அடுத்த கொத்தனூர் கிராமத்தில் பி.டி..வுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 1997ல் கையகப்படுத்திய நிலத்தை இதை சிலர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இதை காலி செய்யும்படி அவர்கள் கேட்டு கொண்டும் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பி.டி.. அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் சென்று நிலத்தில் அமைக்கப்பட்டிருந்து ஷெட்களை அகற்றி ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர்.