தினமணி 04.08.2012
பேனர்கள் அகற்றம்
கோபி, ஆக.3: கோபியில் பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பேனர்கள், தட்டிகள் மற்றும் ஃபிளக்ஸ் போர்டுகள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நகராட்சி ஆணையருக்குப் புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பல நாட்களாக வைக்கப்பட்டிருந்த தட்டிகள், பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் நகராட்சிப் ப ணியாளர்களால் அகற்றப்பட்டன.
நகராட்சி ஆணையாளர் ஜான்சன் கூறுகையில், ஆட்சியரிடம் அனுமதி பெற்றுத்தான் போர்டுகள் வைக்க வேண்டும்; அதுவும் 6 நாள்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் வைக்கக் கூடாது. அதையும் மீறி வைத்திருந்தால் அகற்றப்படும் என்றார்.