தினமலர் 05.08.2012
மெரீனா கடைகளில் விளம்பரங்கள் அழிப்பு
சென்னை :"தினமலர்' சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மெரீனா கடைகளில் விதி மீறி வரையப்பட்ட தனியார் அலைபேசி விளம்பரங்களை அழிக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.மெரீனா கடற்கரை மணல் பரப்பை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு, எந்த அனுமதியுமின்றி, உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்போடு, மென் மேலும் கடைகள் அதிகரித்து வருகின்றன. மெரீனா ஆக்கிரமிப்பு கடைகளை, தனியார் அலைபேசி நிறுவனம் கடை முழுவதும், விளம்பரத்தால் பளிச்சிட வைத்தது. தள்ளு வண்டி கடைகள் கூட தப்பவில்லை.
இதுகுறித்து "தினமலர்' படத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மெரீனா கடற்கரையில் தனியார் அலைபேசி நிறுவன விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.