தினமலர் 18.08.2012
புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சேலம்: சேலம் மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்டில், நேற்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.சேலம் மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்டில், 50க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து, பழக்கடை, துணிக்கடை, கம்மங்கூழ் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் அனுமதி பெற்று, புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
நேற்று சூரமங்கலம் உதவிபொறியாளர் செந்தில், உதவி வருவாய் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்டோர், மாநகராட்சி வாகனங்களில் சென்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். கடைகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். புது பஸ் ஸ்டாண்டில், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நேற்று சூரமங்கலம் உதவிபொறியாளர் செந்தில், உதவி வருவாய் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்டோர், மாநகராட்சி வாகனங்களில் சென்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். கடைகளை அகற்ற, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். புது பஸ் ஸ்டாண்டில், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.