தினமணி 25.08.2012
வந்தவாசியில் 27-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வந்தவாசி, ஆக. 24: வந்தவாசி நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆக. 27ஆம் தேதி அகற்றப்பட உள்ளதாக நகராட்சி ஆணையர் ஈ.மனோகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வந்தவாசி நகராட்சி எல்லைக்குள்பட்டப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் போலீஸôர் பாதுகாப்புடன் நகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரால் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வந்தவாசி நகராட்சி எல்லைக்குள்பட்டப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் போலீஸôர் பாதுகாப்புடன் நகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரால் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 27) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.