Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்48 மணி நேரம் "கெடு'

Print PDF

தினமலர்                         06.09.2012

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்48 மணி நேரம் "கெடு'

 மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், கடை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். துணை கமிஷனர் சாம்பவி, நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் அதிகாரிகள், நேற்று இங்கு ஆய்வு செய்தனர். "கடையின் வெளியே "டிரே' அமைத்தல், கட்டடத்தின் வெளியே பலகை மேடை, ஒரே கடையில் இருவழியில் விற்பனை,' போன்ற, முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"அவற்றை உடைத்து அப்புறப்படுத்த,' துணை கமிஷனர் சாம்பவி உத்தரவிட்டார். இரும்பு ஆயுதங்களை கொண்டு, ஆக்கிரமிப்புகள் நொறுக்கப்பட்டன. துணை கமிஷனரை சந்தித்த வியாபாரிகள் சங்கத்தினர், "மாலை 5 மணி வரை அவகாசம்,' கேட்டனர். ""தடையுத்தரவு பெற அவகாசம் கேட்கிறீர்கள். பல முறை நோட்டீஸ் அனுப்பினோம். நீங்கள் எடுக்கப்போவதில்லை, அதனால் நாங்கள் எடுக்கிறோம். பொருட்களுக்கு பாதிப்பு வராது,'' எனக்கூறி, அதிகாரிகள் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். இதனால், வியாபாரிகள் ஏமாற்றமுற்றனர்.

கடைகளில், "காஸ் சிலிண்டர்' பயன்படுத்தியதை துணை கமிஷனர் கண்டித்தார். "சிலிண்டர் கைப்பற்றுவதை தடை செய்வதற்கான ஆணை பெற்றுள்ளதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர். ""போலீசார் கைப்பற்றுவதற்கு தான், கோர்ட் தடை ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சி விதிகளின் படி, பஸ் ஸ்டாண்டில் இரு ஓட்டல்களுக்கு மட்டும், காஸ் சிலிண்டர் பயன்படுத்த முடியும். சிலிண்டர் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்,'' என, துணைகமிஷனர் எச்சரித்தார். அவர் கூறியதாவது: கடைகளின் சுவரை இடித்து, இருபுறமும் வியாபாரம் செய்கின்றனர். 48 மணி நேரத்தில் சுவர் எழுப்பி, ஒதுக்கிய அளவிற்கு கடையை பயன்படுத்த வேண்டும். தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். உதவிப்பொறியாளர்கள் ரங்கநாதன், தியாகராஜன் உடனிருந்தனர்.
Last Updated on Thursday, 06 September 2012 09:09