Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தின மணி                           21.02.2013

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர் செல்லும் வீதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்குக் கோட்டை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வட்டாட்சியர் ப.காந்தி முன்னிலையில் நடைபெற்றது.

நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். காவல் ஆய்வாளர் பாண்டித்துரை தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Thursday, 21 February 2013 11:16