Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்

Print PDF
தின மணி          23.02.2013

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்


குடியாத்தம் அருகே ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 6 குடிசைகளை வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருகே உள்ள நாராயணசாமி தோப்பு பகுதியில் கௌன்டன்யா ஆற்றின் கரையை ஆக்கிரமித்து அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் வியாழக்கிழமை இரவு குடிசைகளை அமைத்துள்ளனர்.

தகவலின்பேரில் வட்டாட்சியர் எம். கஜேந்திரன் தலைமையில், துணை வட்டாட்சியர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தினம், இளங்கோ உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அங்கு சென்று குடிசைகளை அகற்றினர்.

Last Updated on Monday, 25 February 2013 12:01