Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

Print PDF
தினகரன்         05.03.2013

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

திருச்சி, : மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் ஜெயா உத்தரவிட்டார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். இதில் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை மேம்பாடு, கழிவறை பராமரித்தல், தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 பேர் மனு அளித்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட மேயர், மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  முகாமில் மாநகர பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மருதப்பிள்ளை, நகர் நல அலுவலர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர்கள் உதயசூரியன், தயாநிதி, ரங்கராஜன், ராஜம்மா, பிரபுகுமார், ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் அமுதவள்ளி, பாலகுருநாதன், நாகேஷ், கண்ணன், திட்டப்பிரிவு உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சிவபாதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.