Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோலியனூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி           22.03.2013

கோலியனூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விழுப்புரம் நீதிமன்றச் சாலையில் உள்ள கோலியனூர் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினர்.

இக்கால்வாய் அருகே நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அக் கடைகளை நடத்தும் சிலர் கோலியனூர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இக்கால்வாய் சிறிய வாய்க்காலாக குறுகியது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர். இந்த வாய்க்கால் அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.