தினமணி 03.04.2013
பழனி நகராட்சி பகுதிகளில் ஏப். 5 ஆக்கிரமிப்பு குறித்து கூட்டாய்வு
பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் பங்கேற்கும் ஆக்கிரமிப்பு குறித்த கூட்டாய்வு ஏப்ரல் 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
பழனி அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பழனி நகராட்சி, திருக்கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியன இணைந்து மேற்கொள்ளப்பட்ட இப்பணியினால் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படத் துவங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஏப்ரல் 5 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரிகள், ஆக்கிரமிப்புப் பகுதிகளை கூட்டாய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பின், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பழனி நகராட்சி பகுதிகளில் ஏப். 5 ஆக்கிரமிப்பு குறித்து கூட்டாய்வு
பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் பங்கேற்கும் ஆக்கிரமிப்பு குறித்த கூட்டாய்வு ஏப்ரல் 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.
பழனி அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பழனி நகராட்சி, திருக்கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியன இணைந்து மேற்கொள்ளப்பட்ட இப்பணியினால் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படத் துவங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஏப்ரல் 5 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரிகள், ஆக்கிரமிப்புப் பகுதிகளை கூட்டாய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பின், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.