Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி       07.04.2013

தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆரணியை அடுத்துள்ள தேவிகாபுரத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன .

தேவிகாபுரத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ஆலயமான கனககிரீஸ்வரர் கோயில் இங்குள்ளது. இக் கோயிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேரூராட்சிக்கான தகுதிகள் அனைத்தும் கொண்ட தேவிகாபுரத்தில் அதிக ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஆரணி வட்டாட்சியர் அனுஷா தலைமையில் தேவிகாபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒரு சிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

வில்வவிநாயகர் கோயிலை சுற்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஐயாத்துரை, மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், சேகர், வருவாய் ஆய்வாளர் மனோகரன், நில அளவர்கள் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.