தினமணி 16.04.2013
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கடலூர் நகரில் பிரதானச் சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை, சிதம்பரம் சாலை, திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள சாலைகள் என அனைத்துப் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன.
இதையடுத்து கோட்டாட்சியர் ரா.லலிதா தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தலைமையில் பொறியாளர் ரவி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள திருவந்திபுரம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிறு கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதியிலும் இப்பணி தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கடலூர் நகரில் பிரதானச் சாலைகளான நெல்லிக்குப்பம் சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை, சிதம்பரம் சாலை, திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள சாலைகள் என அனைத்துப் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன.
இதையடுத்து கோட்டாட்சியர் ரா.லலிதா தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் ப.காளிமுத்து தலைமையில் பொறியாளர் ரவி மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.
திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள திருவந்திபுரம் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சிறு கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதியிலும் இப்பணி தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.