Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி       20.04.2013

புதுவையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் சாலை பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

புதுச்சேரியில் பேனர்கள் வைக்க அரசு தடை விதித்தது. அதையும் மீறி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை அகற்ற வேண்டுமென சில அமைப்புகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து 19-ம் தேதிக்குள் பேனர்களை அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அவகாசம் முடிந்ததையொட்டி, வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில், வருவாய்த்துறையினர் பேனர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். ராஜா திரையரங்கு சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை, இந்திராகாந்தி சிலை சந்திப்பில் இருந்து நெல்லித்தோப்பு சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

மேலும், சாலையோரத்தில் வணிகர்களின் விளம்பரத் தட்டிகள், ஆக்கிரமிப்பு கூரைகள், பொருள்கள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினர். பாலாஜி திரையரங்கு அருகே ஆக்கிரமிப்பு அகற்றியபோது, அங்கிருந்த வணிகர்களும், பொதுமக்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்தனர்.