தினமணி 24.09.2009
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஈரோடு, செப். 23: ஈரோடு நகரில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
ஈரோட்டில் போக்குவரத்தைச் சீரமைக்கவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் பன்னீர்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரையில் இருந்த சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் புதன்கிழமை காலை மணிக்கூண்டு பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிறு கடைகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.