Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

Print PDF

தினமணி 3.11.2009

ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

ஆம்பூர், நவ.2: ஆம்பூரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அவர்களாகவே அகற்ற வேண்டும் இல்லையெனில் ஆக்கிரமிப்புகளை நகராட்சியே அகற்றும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தா. உதயராணி கூறினார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

போக்குவரத்து சீராக நடைபெற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இல்லையெனில் நகராட்சி பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.