Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டிவனத்தில் கொட்டும் மழையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 6.11.2009

திண்டிவனத்தில் கொட்டும் மழையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டிவனம், நவ. 5: திண்டிவனம் நகரில் உள்ள நேரு வீதியில் கொட்டும் மழையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

நேரு வீதியில் உள்ள இருபுறங்களிலும், கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த, விளம்பரப் பலகைகள் மற்றும் கொட்டகைகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. நகரம் முழுவதும் இந்த பணி இன்னும் இரண்டு நாள்கள் தொடருமென்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இப்பணியின் போது, திண்டிவனம் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நேரு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Last Updated on Friday, 06 November 2009 06:04