Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கம்பம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 2.12.2009

கம்பம் நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம்,டிச. 1: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியான ஓடைக்கரைத் தெருவில், பஸ் நிலையம் சிக்னலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சியின் நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டனர். இதில் வலதுபுறமாக மட்டும் ஆக்கிரமிப்பு எடுப்பதாகவும், ஓடைக்கரையின் வடக்கு பகுதியில் மட்டும் ஆக்கிரமைப்பு அகற்றுவதாகவும், தெற்கு புறத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முறையாக இல்லையெனக் கூறி 50-க்கும் மேற்பட்டோர், ஆக்கிரமிப்பு அகற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை மறித்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தினர்.

இதனைத் தொடர்நது கம்பம் தெற்கு காவல் நிலையத்திலிருந்து காவல் துறையினர் நகராட்சி ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். இதற்கிடையே பொதுமக்களும், நகராட்சி கட்டடப் பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மீண்டும் ஓடைக்கரை தெருவின் தெற்கு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஓடைக்கரை தெருமக்கள் கூறியவது:

ஓடைக்கரை தெருவில் ஆக்கிரமிப்பு என்று கூறி கழிவுநீர்க் கால்வாயிகள் மூடப்பட்டு சுகாதாரமாக வைத்திருந்த மூடிகளை அகற்றுகின்றனர். முறையாக அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பயனுள்ளதாக இருக்கும், இதில் பாரபட்சமாக ஆக்கிரமைப்பு அகற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர். நகராட்சி கட்டடப் பிரிவினர் கூறியதாவது: நகராட்சிப் பகுதியில் கழிவுநீரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்றனர்.