Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 23.12.2009

தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாராபுரம், டிச.22: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு அடுத்தபடியான பெரிய நகரம் தாராபுரமாகும்.இந்நிலையில் நகராட்சிக்குச் சொந்தமான பகுதிகளில் ஏராளமானோர் ஆக்கிரமிப்புகளைச் செய்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து தாராபுரத்தில் நகராட்சிப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி ஆணையர் எஸ்.துரை உத்தரவின்பேரில், நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தாராபுரம்-உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில், பல்லாண்டுகளாகச் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

சில இடங்களில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானரவி தலைமையிலான போலீஸôர், பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 23 December 2009 09:28