தினமணி 23.12.2009
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளுக்கு சீல்
சென்னை, டிச. 22: சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்த 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
சென்னையில் வார்டு 152}ல் துர்காபாய் தேஷ்முக் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 32 பழக்கடைகளும், 14 பூ கடைகளும் இயங்கி வந்தன.
இவற்றில் சில கடைகள் சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்தன.
அப்பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்