தினமலர் 05.01.2010
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் கெடு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றி விட வேண்டும் என்று நகராட்சி தலைவர் சிவபிரகாசம் அறிவித்துள்ளார். புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பூக்கடை மார்க்கெட் பகுதிகளில் நிரந்தர கட்டடம் கட்டி, ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை ரோட்டில் கட்டடங்கள் கட்டி நிரந்தர ஆக்கிரமிப்புகள் செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக உள்ளது. பூக்கடை பஜாரில் அனுமதிக்கப்பட்ட கடை அளவை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நெடுஞ்சாலை துறை, போலீஸ் மற்றும் நகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.