தினமலர் 07.01.2010
துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
துறையூர்: துறையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.துறையூர் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் முசிறி பிரிவு ரோட்டில் துவக்கினர். முசிறி ஆர்டிஓ மீனாட்சிசுந்தரம், துறையூர் தாசில்தார் நந்தகுமார், துணை தாசில்தார்கள் வளர்மதி, சூடாமணி, பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் கேசவன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தமிழமுதன், ஆர்.ஐ. பாலு, வி.ஏ.ஓ. ஜெகநாதன், நகராட்சி அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் தாங்களே அகற்றிக் கொண்டாலும் ஒரு சில இடங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.திருச்சி ரோடு, பாலக்கரை, பெரியகடைவீதி, பெரம்பலூர் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.