தினமலர் 08.01.2010
கம்பத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
கம்பம் : கம்பம் நெடுஞ் சாலை ரோட்டில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட் டுள்ளது.கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ரோட்டில் கடந்த இரண்டு தினங்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. கடைகள், குடியிருப்பு, அரசு அலுவலகம், கோயில்கள் பராபட்சமின்றி அகற்றப்பட்டன. கம்பம் நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் கூறுகையில்; கம்பம் மெயின் ரோட்டில் 228 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப் பட்டன. ஆக்கிரமிப்பில் இருந்த 18 கோயில்கள், 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 15 இடங்களில் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. கம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட அக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையில் ஒரு ஏக்கர் அரசு இடம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.