தினமணி 08.01.2010
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம், ஜன.7: விழுப்புரம் நேருஜி சாலையில், சிக்னல் முதல் ரயில் நிலையம் வரை இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகாட்சி அலுவலர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றினர்.
இச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுவதால் கடைகளின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பந்தல், நடைமேடை ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
நகராட்சி ஆணையர் சிவகுமார், நகரஅமைப்பு அலுவலர் நாச்சிமுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சேகர், போக்குவரத்து ஆய்வாளர் சு. செல்வராஜன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவிப் பொறியாளர்கள் மகாலட்சுமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.