Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

Print PDF

தினமணி 20.01.2010

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு

ராசிபுரம், ஜன.19: ராசிபுரம் நகராட்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட அண்ணா சாலை, நாமக்கல் சாலை, தேரடிச் சாலை, கடை வீதி, சின்னக்கடை வீதி போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள் போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் அப்புறப்படுத்திக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில், வருவாய்த் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளின் ஒத்துழைப்போடு நகராட்சி மூலம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் திருப்பித் தரமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:28