தினமலர் 20.01.2010
ரோட்டை ஆக்கிரமித்த கடைக்காரர்களுக்கு அபராதம்
சிவகாசி:சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆய்வாளர்கள் மாரியப்பன், பாலகிருஷ்ணன், தவிட்டுராஜா அடங்கிய குழுவினர் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, சிவன்மாட வீதி, ரத வீதிகள், புதுரோட்டு தெரு, சாத்தூர் ரோடு, காமாக் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூராக வியாபாரம் செய்த 30 பேர் மீதும், பிளாஸ்டிக் கப் பயன்படுத்தி சாக்கடை வாறுகாலில் தூக்கி வீசி சுகாதார கேட்டை ஏற்படுத்திய 25 பேருக்கும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.