தினமலர் 21.01.2010
'வெரி குட்' குட்ஷெட் தெருமதுரை : மதுரை குட்ஷெட் தெரு, ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் திணறியது. யாருக்கும் பயன்படாத, அகலமான பிளாட்பாரம்; கட்டுப்பாடு இல்லாமல் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; ஆங்காங்கே எப்போதும் சரக்குகளை இறக்கும் லாரிகள் என ரோடு, கூனி குறுகிப் போய் இருந்தது. இந்த ரோட்டில் போவதே, ஒரு வேதனையான அனுபவமாக இருந்தது.
நேற்று போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ், நகரமைப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை எடுத்தனர். பிளாட்பாரங்களை அகற்றி, ரோட்டை அகலப்படுத்தினர்.