தினமலர் 22.01.2010
சாலை மேம்பாட்டு திட்டத்தில் ஆக்ரமிப்பு அகற்றும் பணிச்
பள்ளிபாளையம்: சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிபாளையத்தில் சாலையோர ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். பள்ளிபாளையத்தில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட், ஈரோடு சாலை, திருச்செங்கோடு, சங்ககிரி சாலை ஆகிய பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப் படுகின்றன. அதில் நேற்று திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மனோகரன் மேற்பார்வையில் சங்ககிரி சாலையில் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கடைகள், சாக்கடை உள்ளிட்டவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சேகர், பள்ளிபாளையம் துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர.