தினமணி 01.02.2010
ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்
ராஜபாளையம், ஜன. 31: ராஜபாளையம் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
ராஜபாளையம் அருகேயுள்ள தென்றல் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை அமைத்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை ராஜபாளையம் வட்டாட்சியர் சங்கரநாராயணன், டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
இப்பகுதியை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
அரசிடம் முறைப்படி மனு செய்து, அனுமதி கிடைத்தால் இப்பகுதியில் வீடு கட்டலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.