தினமலர் 05.02.2010
ஆக்கிரமிப்பு அகற்றம்
அரூர்: அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதி, கடை வீதி, பழையபேட்டை உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. நெடுஞ்சாலை துறையினர், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் தலைமையில் பணியாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதையொட்டி அரூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு கடந்த 30 நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அரூர்: அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதி, கடை வீதி, பழையபேட்டை உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. நெடுஞ்சாலை துறையினர், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் தலைமையில் பணியாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதையொட்டி அரூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு கடந்த 30 நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.