Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி புதிய பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமிப்பு : டாஸ்மாக் பார் சுவர் இடிப்பு

Print PDF

தினமலர் 05.02.2010

தூத்துக்குடி புதிய பஸ்ஸ்டாண்டில் ஆக்ரமிப்பு : டாஸ்மாக் பார் சுவர் இடிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்ரமிப்பை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் பார் ஊழியர்கள் தகராறு செய்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்த பிறகு பிரச்னை தீர்ந்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பினை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள், நீட்டிப்பு தட்டிகள் போன்றவற்றை அகற்றினர். புதிய பஸ் ஸ்டாண்டில் டாஸ்மாக் பாருக்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. பயணிகளுக்கு இடையூறாக பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 20 அடி சுவற்றை மாநகராட்சி முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், காந்திமதி மற்றும் ஊழியர்கள் அகற்ற சென்றனர்.அப்போது முதுநிலை நகரமைப்பு அதிகாரி ராக்கப்பனிடம் பார் ஊழியர்கள் தகராறு செய்தனர். சுவரை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மாநகராட்சி அதிகாரிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்தனர். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அந்த சுவரை மாநகராட்சி ஜெ.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்டது. பின்னர் பஸ் ஸ்டாண்டை அடுத்துள்ள ரவுண்டானா அருகே கடைகளில் நீட்டி வைக்கப்பட்டிருந்த செட்கள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணி நடந்த போது பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Friday, 05 February 2010 06:56