Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 09.02.2010

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருக்கோவிலூர், பிப். 8: தினமணி செய்தி எதிரொலி காரணமாக திருக்கோவிலூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

÷திருக்கோவிலூரில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் வியாபார நிறுவனங்கள் இவ்வூரை திக்குமுக்காட செய்கின்றன.

÷வியாபாரிகள் அடாவடித்தனத்தால் பஸ் நிலையத்தில் இருந்து மக்கள் பெருமாள் கோயில் செல்வதற்குள் மூச்சு முட்டிவிடும் அளவுக்கு நெரிசல் நிலவுகிறது. அதோடு வியாபாரிகள் தங்களுடைய கடைக்குள் மட்டும் வியாபாரம் செய்யாமல் எதிரில் உள்ள சாலையை ஆக்கிரமித்து அதை வாடகைக்கு விட்டு சாலையிலேயே கடைகளை பரப்பி உள்ளதால் பாதசாரிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

÷நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்நகரத்தில் மக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் சாலையிலேயே மிகப் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் அரசியல்வாதிகளால் வைக்கப்படுகிறது.

÷இத்தகைய டிஜிட்டல் பேனர்கள் மக்களை அச்சுறுத்துவதோடு ஒரு சில இடங்களில் கடைகளை மறைத்து வைத்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் குமுறுகின்றனர்.

÷இதுமட்டுமின்றி ஒரு சில டிஜிட்டல் பேனர்கள் கீழே சரிந்து விழுந்து மின் கம்பிகளை அறுத்து மக்களுக்கு பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எந்தவொரு விளம்பர பேனர்களாக இருந்தாலும் 3 நாள்களுக்கு மேல் வைக்கக்கூடாது என அரசு உத்தரவு இருந்தும் காவல் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

÷இதனால் அன்றாடம் போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் இப்பகுதி மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் பஸ்ûஸ இயக்குவதற்கும் சிரமம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்துக்கு தங்களது பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் இப்பகுதியில் சாலையையொட்டி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்றவும், பஸ் நிலையத்தில் தாறுமாறாக சுற்றித்திரியும் தள்ளுவண்டிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், நடைபாதை ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ஜனவரி 14-ம் தேதி தினமணி நாளிதழில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் திருக்கோவிலூர் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது.

÷தினமணி செய்தி எதிரொலி காரணமாக நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் திருக்கோவிலூர் நகரப் பகுதி முழுவதும் சாலையோர ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன.÷அதில் முதல் கட்டமாக திருக்கோவிலூர் நகரப்பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 09 February 2010 07:07