Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 10.02.2010

பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தல்

திருச்சி, பிப். 9: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கோயில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதி உள்பட 9 வட்டங்களிலும் மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:53