Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 11.02.2010

ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது இடங்கள், கோயில், தேவாலயங்கள் பள்ளிவாசல்கள், குருத்துவாரா ஆகிய மத சம்பந்தப்பட்ட இனங்கள் வாயிலாக அனுமதியின்றி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதி உள்ளிட்ட 9 தாலுகாகளிலும் மேற்படி மத சம்பந்தப்பட்ட இனங்கள் மூலம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களே பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திக் கொள்ளாவிட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படும்.

Last Updated on Thursday, 11 February 2010 08:13