Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பரப் பலகைகள்

Print PDF

தினமணி 12.02.2010

விளம்பரப் பலகைகள்

அகற்ற குழு

சேலம் மாநகரில் நீண்ட நாள்களாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்ற விரைவிóல் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மாநகரில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பும், நிகழ்ச்சி முடிவடைந்த 3 நாள்கள் வரையிலும் மட்டுமே விளம்பரப் பலகைகள் வைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மாநகர் முழுவதும் பல இடங்களில் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள், பேனர்கள் மாதக் கணக்கில் அகற்றப்படாமல் இருந்து வருகின்றன.

இவற்றை அகற்ற வேண்டும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதிமுகவினர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். இருப்பினும் பேனர்கள் எதுவும் இதுவரை அகற்றப்படவில்லை. இது குறித்து டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி கூறியது:

மாநகரிóல் வைக்கப்படும் பேனர்களால் மாநகராட்சிக்கு வருவாய் எதுவும் கிடைப்பதில்லை. பேனர்கள் வைப்பதற்கு போலீஸôரும், மாநகராட்சியுமே இணைந்து அனுமதி வழங்கி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் அனுமதி பெறாமலேயே பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர போலீஸôருடன் கலந்து பேசி விரைவில் ஒரு குழு அமைக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து அனுமதி பெறாமல், விதிகளுக்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும் என்றார் அவர்.

Last Updated on Friday, 12 February 2010 11:11