Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 20.02.2010

மன்னார்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மன்னார்குடி, பிப். 19: மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மன்னார்குடி நடேசன் தெரு, நகர, புதிய பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வர்த்தக நிறுவனத்தினர் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களையும், போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை தானாகவே முன் வந்து அகற்றுமாறு நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் முன் வரவில்லை. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நகராட்சி ணையர் மதிவாணன், பொறியாளர் எ.முருகானந்தம் ஆகியோர் பார்வையிட்டனர். மன்னார்குடி காவல் ஆய்வாளர் மு.மணிமாறன் தலைமையில் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:28